இங்கிலாந்து தேர்தலில் அமோக வெற்றிபெற்று ஆட்சியை மீண்டும் கைப்பற்றியுள்ள பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தலைமையிலான கொன்சர்வேற்றிவ் கட்சிக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது ருவிற்றர் பக்கத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) ஷ வாழ்த்து தெரிவித்துள்ளார்.
குறித்த பதிவில், “நான் கொன்சர்வேற்றிவ் கட்சிக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்.
பொரிஸ் ஜொன்சனின் தீர்க்கமான தலைமை இந்த வெற்றிக்கு வழிவகுத்தது என்பதில் சந்தேகமில்லை. பிரதமராக இருந்து அவரது மிகச் சிறந்த சேவையை பாராட்டுகிறேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.