சங்குகளுடன் சந்தேகநபர் ஒருவர் தலைமன்னார் – கரிசல்பாடு பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.மன்னார் மாவட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.இச் சுற்றிவளைப்பை கடற்படையினரும் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளும் இணைந்து மேற்கொண்டது என்பது குறிப்பிட தக்கது.
477 சங்குகள் அனுமதிப்பத்திரம் இன்றி கடையொன்றில் ஒழித்து வைக்கப்பட்டிருந்தது கைப்பற்றப்பட்டது கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இதனை பேசாலை பகுதியை சேர்ந்த 52 வயதான ஒருவரே செய்யதுள்ளார்.கைப்பற்றப்பட்ட சங்குகளும் சந்தேகநபரும் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் மாவட்ட கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.