Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இரண்டாம் கட்ட விடைத்தாள் மதிப்பீட்டுக்காக 27 பாடசாலைகள் மூடப்படவுள்ளன….

இரண்டாம் கட்ட விடைத்தாள் மதிப்பீட்டுக்காக 27 பாடசாலைகள் மூடப்படவுள்ளன….

1 minutes read

க. பொ. த சாதாரண தரப் பரீட்சையின் இரண்டாம் கட்ட விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் எதிர்வரும் 16 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன. இம்மதிப்பீட்டு நடவடிக்கை எதிர்வரும் 26 ஆம் திகதி வரைஇடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்காக 27 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன்,மாத்தறை – மஹாமாயா மகளிர் பாடசாலை, கண்டி புனித அந்தோனியார் மகளிர் கல்லூரி மற்றும் குருணாகல் – மல்லவபிட்டிய C.W.W. கன்னங்கர பாடசாலை ஆகியன முழுமையாக மூடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஏனைய 24 பாடசாலைகள் பகுதியளவில் மூடப்படவுள்ளன.

இதனிடையே, கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் இரண்டாம் கட்ட விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகளில் 9000 அதிகாரிகள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளில் ஈடுபடவுள்ள பிரதான மதிப்பீட்டாளர்களுக்கு பயிற்சி வழங்கும் அமர்வு எதிர்வரும் 11, 12 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளன.

கொழும்பு ரோயல் கல்லூரியில் இடம்பெறவுள்ள இந்த பயிற்சி அமர்வில் பிரதான மதிப்பீட்டாளர்கள் 600 பேர் பங்கேற்கவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More