மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகியுள்ளார்.
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் வாக்கு மூலம் வழங்குவதற்காக ஆணைக்குழுவின் அறிவித்தலுக்கு அமைய அவர் முன்னிலையாகியுள்ளார்.
இன்று (08) காலை 9 மணிக்கு ஜனாதிபதி ஆணைக்குழுவிலுள்ள பொலிஸ் பிரிவிற்கு சென்ற மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
ஜனாதிபதி ஆணைக்குழுவில் இதுவரை 47 பேர் சாட்சி வழங்கியுள்ளனர்.
மேலும், 317 பேர் ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.