புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மட்டக்களப்பு விபத்தில் இளைஞர் ஒருவர் பலி!

மட்டக்களப்பு விபத்தில் இளைஞர் ஒருவர் பலி!

0 minutes read

மட்டக்களப்பில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இந்த விபத்து இன்று அதிகாலை மட்டக்களப்பு – வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனைகட்டியவெளி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் ஆலயம் ஒன்றுக்குச் சென்றுவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தவர்களே இந்த விபத்தில் சிக்கியுள்ளனர் என்று வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது 35ஆம் கொலனி, பக்கியல்ல பகுதியைச் சேர்ந்த சச்சி என்னும் 19 வயது இளைஞர் உயிரிழந்துள்ளதுடன், அதே பகுதியைச் சேர்ந்த ச.லோஜன் என்னும் 23 வயதுடைய இளைஞர் படுகாயமடைந்துள்ளார்.

இருவரும் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில், சச்சி எனும் இளைஞர் உயிரிழந்துள்ளார்.

லோஜன் எனும் இளைஞர் படுகாயமடைந்திருந்த நிலையில், மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More