சிம்பாவே அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டதடை குறித்து தென்னாபிரிக்கா அதிர்ச்சி அடைந்துள்ளது.
தென்னாபிரிக்காவிலிருந்து கால்நடைகள் மற்றும் இறைச்சி வகைகளை இறக்குமதி செய்து வந்த சிம்பாவே இம்முடிவை எடுத்துள்ளது.
கால்நடைகளுக்கு பரவும் தொற்று நோய் காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் சிம்பாவே அரசாங்கத்தின் குறித்த தீர்மானம் தென்னாபிரிக்காவின் ஏற்றுமதி துறையில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுவதுடன்இதனால் தென்னாபிரிக்க அரசாங்கம் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.