இந்த ஆண்டு நிகழவிருக்கும் 4 சந்திர கிரகணங்களில் நாளை முதலாவது சந்திர கிரகணம் நிகழவுள்ளது.மேக மூட்டம் இல்லை என்றால் நாம் வெறும் கண்ணால் இந்த கிரகண நிகழ்வை பார்த்து ரசிக்க முடியும். நாளை இரவு 10.37 மணிக்கு தொடங்கி மறுநாள் அதிகாலை 2.42 மணி வரை கிரகணம் நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இச் சந்திர கிரகணத்திற்கு ‘ஓநாய் சந்திர கிரகணம்’ (Wolf Moon Eclipse) என அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா பெயரிட்டுள்ளது.
இந்த கிரகண நிகழ்வை ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளில் ஏறக்குறைய அனைத்து இடங்களிலும் பார்க்கலாம் என்று நாசா அறிவித்துள்ளது.