ஏப்ரல்_13, 1919
மனிதக் கருணை
துப்பாக்கியாலும்..
பீரங்கியாலும்..
துளைக்கப்பட்டது.
இருபதாயிரம்
ஆண்கள்..
பெண்கள்..
குழந்தைகள்..
துடிதுடித்து
நெருப்பிலிட்ட மீன்களாய்
துள்ளிப் புரண்டனர்.
அறுவடைத் திருவிழா நிகழும்
வைகாசி நாள்
ஜாலியன்வாலாபாக் மைதானம்
முழுப்பிணங்களால்..
அரைப்பிணங்களால்..
நிரம்பித் ததும்பியது.
மரணம் கக்கிய
ஜெனரல் டயரும்.. கூலிப்படைகளும்..
கொலையுண்டவரின் உயிரை..
கந்தகப்புகையை..
உதிர வாசனையை..
ஊற்றெடுத்து பெருக்கெடுத்த கண்ணீரைக்
குடித்து
கெக்கொலித்தனர்.
அகிம்சை தேசத்தின்
இதிகாசத்தில் இருந்து
மனிதக் குருதியின் ஈரம்
கிளர்ச்சியுடன்
இன்னும்.
வசந்ததீபன்