செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் நரிகளின் நிழல்கள் | கருணை ரவி

நரிகளின் நிழல்கள் | கருணை ரவி

0 minutes read

 

அந்த வெளியில்
அவள் நிர்வாணமாய் நடந்தாள்
துடித்துக்கொண்டு
பல ஆடைகள்
முட்களில் கிடந்தன
நட்சத்திரங்கள் துப்பும் சிறு துளிகள்
அவள் முதுகில் ஒழுக
ஒளி நிரம்பிய கண்கள் எதுவும் இல்லை
புணர்ச்சி முறுகிய
நரியொன்றின் முனகல்
ஒரு பகலாய் அச்சமூட்ட
அவளின் நிர்வாணத்தில்
நரிகளின் நிழல்கள்
ஊரத் தொடங்கின

5.3.2023
இரவு 10 மணி

கருணை ரவி

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More