செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் கத்தியை தீட்டாதீர்கள் புத்தியை தீட்டுங்கள் | பா.உதயன்

கத்தியை தீட்டாதீர்கள் புத்தியை தீட்டுங்கள் | பா.உதயன்

0 minutes read

அன்று கையில்
புத்தகமும் கையுமாய்
கல்வியும் கண்ணுமாய்
அன்னை தந்தை
ஆசிரியன் சொற்படிமாய்
தமிழ்த் தம்பிமார் இருந்தார்கள்

இன்று வாயில்
புகையும் தண்ணியுமாய்
கையில் கத்தியுமாய் வாளுமாய்
கொன்று திரிகிறார்கள்

அன்று ஒரு காலம் மேய்ப்பவன்
ஒருவன் இருந்தான்
ஏன் என்று கேட்க

அங்கு ஒரு ஒழுங்கு இருந்தது
அமைதி பேண தமிழருக்காய்
ஒரு படை இருந்தது
இன்று என்ன இருக்கின்றது

இன்று எவரும் இல்லாமல்
ஏன் என்று கேட்க
தானாய் தம்மையே
அழிக்கிறார்கள் தமிழர்

தெரிந்து கொள்ளுங்கள்
எம்மை ஆக்கிரமித்து
இருப்பவனுக்கும்
நாம் அழிவது தானே விருப்பம்

இனி என்ன தான்
மிஞ்சி இருக்கப் போகிறது
கஞ்சிக்கு கடைசியில்
என்ன செய்வீர்
கல்வியைத் தொலைத்து விட்டு

புலம் பெயர்ந்து இருக்கும்
உங்கள் அண்ணனும் அக்காவும்
மாமனும் மச்சானும்
இன்னும் எத்தனை காலம் தான்
காசு தருவான்
அவனுக்கும் நரை
விழுந்து விட்டது தலையில்

இனி இங்கு இருக்கும் எம்
இளசுகள் உங்களை நினைக்குமோ
நாம் அறியோம்
அவர்கள் பாதை புதியது
தெரிவுகளும் புதியது

எங்களையே இவர்கள் பழசுகள்
என்றழைக்கும் காலம் இப்போ
எங்கள் அடையாளமும்
காலமும் கலாச்சாரமும்
இங்கு மாறித்தான்
சுழர்கிறது

நினைவில் வையுங்கள்
கத்தியும் வாளும் கடைசியில்
உங்களையும் கொல்லும்
காலம் வரும்

தமிழராக தலை நிமிரும்
பாதையை தேடுங்கள்
கத்தியை தீட்டாதீர்கள்
புத்தியை தீட்டுங்கள்.

பா.உதயன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More