செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் வானளந்த வானரங்கள் | கவிதை | கேசுதன்

வானளந்த வானரங்கள் | கவிதை | கேசுதன்

0 minutes read

தேசங்கள் மிளிரும் நேரம்
கண்வைத்தவன் எவனோ
காகங்களும் வட்டமிடுகிறது
ஆங்காங்கே
தெருக்கள் முழுவதும்
இடைவிடாத சப்தங்கள்
என்னினங்களும் கண்டிராத கேட்டிராத
புதியதொரு பறவையினங்கள்
கூவியபடி வானில் படமெடுத்தபடி சுற்றியது
தெருமுனைகலெங்கும் பதட்டமடைந்த
புறாக்கள்
விழிகள் பிதுங்கிய குருவிகள்
சற்று விரிசல் விழுந்த முகில்களுக்கிடையே
வானை கிழித்து பறந்த பருந்துகள்
குமுறிய சத்தத்தின் நடுவே
குளறிய குருவிகள் பதுங்குகுழிகளை தேடி
தன் குஞ்சுகளுடன் பதுங்கியது

இயற்கையின் மாறுபட்ட ஒலியின் விசித்திரத்தை
அறியாத குஞ்சுகள் வானில் வேட்டையாட
துரத்திடும் பருந்துகளின் கூரிய சொண்டுக்கு
இரையாவதை அறிந்திருக்கவில்லை

மேலும் கீழும் பறந்திட்ட பருந்துகளின்
கண்களில் குருவிகளின் கூடுகள் சிக்கவில்லை
போலும்
வானில் குமுறிய சப்தத்தின் பதட்டத்தில்
முகில்களின் முகங்களும் கறுத்தது
வேற்றுநாட்டில் உலாவிய பறவைகளும்
பருந்துகளுக்கு வேட்டையாடிட
இரைகளை காட்டிக்கொடுத்தது

வீறுகொண்டு விசும்பளந்த பருந்துகள்
நிலமகள் தாவிய குருவிகளை கூண்டோடு
கவ்விச்சென்றது
அலறிய குரல்களின் அவயங்கள்
தூண்டற சிதைத்தழித்தது
தணியாத பசியோடு பறந்த
கருடன் மீண்டும் வருவான்
மிஞ்சிய குஞ்சுகளும்
கூடழிந்து இடமறிற்று.

கேசுதன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More