புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் இருண்ட காலத்தின் தாலாட்டு | த. செல்வா

இருண்ட காலத்தின் தாலாட்டு | த. செல்வா

1 minutes read

நான் என் மகனுக்கு
இருண்ட காலத்தின் பாடல்களை பாடிக்காட்டி விடியலின் மேடையிலே ஆடுவது பற்றி சொல்லிக் கொடுப்பேன்

என் மகன் என்னைப் போல் துரோகிகளிடம் அகப்படாமல்
காத்திருப்பில் மூழ்காமல்
அன்புநதியால் அடித்துச் செல்லாமல்
ஏமாற்றங்களை ஏணியாக்காமல்
புரட்சி செய்ய சொல்லிக் கொடுப்பேன்

புகழ் போதையில் சிக்காமலும்
பழிச் சொற்களால் பயப்படாமலும்
வாழும் தைரிய விதிகளை கவிதையாக்கிக் காட்டுவேன்

தேயும் பிறை முழுமதியாகும்
ஓடும் நதி கடலை அடையும் என்பதை
முணுமுணுத்துக் காட்டுவேன்

சிரிக்கும் போது அழுகையினையும்
அழும் போது சிரிப்பினையும் நேசியென
இடித்துரைப்பேன்

ஏனெனில்
என் மகன் நான் வாழாத
வேறொரு வாழ்வை வாழ வேண்டுமென்பதற்காய்

ஏனெனில்
என் மகன் நான் பார்த்த
மனிதர்களைக் காணக் கூடாதென.

த.செல்வா
12.47

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More