செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் தியான முத்திரையில் தியானம்!

தியான முத்திரையில் தியானம்!

1 minutes read

தரையில் விரிப்பு விரித்து அதில் சுகாசனத்தில் அமரவும். கைகளை தியான முத்திரையில் வைக்கவும். இடது கை கீழ் அதன் மேல் வலது கை வைத்து இரண்டு பெருவிரல் ஒன்றையொன்று தொடட்டும். கைகளை மடிமேல் வைக்கவும். கண்களை மூடி மிக மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும். பத்து முறைகள் செய்யவும்.

பின் இயல்பாக நடக்கும் மூச்சை மட்டும் கவனிக்கவும். பத்து நிமிடங்கள் மூச்சில் மட்டும் கவனம் செலுத்துங்கள். “ஜீவனை சிந்தையில் நினைத்து நிற்றலே தியானம்.” இந்த தியானத்தை காலை / மாலை பத்து நிமிடங்கள் செய்யவும்.

பலன்கள்: ரத்த அழுத்தம் வராது. மன அழுத்தம் நீங்கும். மன அமைதி கிடைக்கும். இதயம் சிறப்பாக இயங்கும். சுறுசுறுப்பாக வாழலாம். நீரழிவு, அல்சர் வராது. உடல் உள் உறுப்புகள் அனைத்தும் சிறப்பாக பிராண ஆற்றல் பெற்று இயங்கும்.

சற்குரு சீரோ பிக்ஷு அருளிய உடம்பிற்கோர் மருந்து நல்ல யோகாசனமும், உள்ளத்திற்கோர் மருந்து தியானத்தையும் காலை மாலை பயிலுங்கள். வளமாக, நலமாக வாழுங்கள்.

மாலை மலர் வாசகர்கள் தங்களின் உடல், மனோ ரீதியான குறைபாடுகள், மற்றும் யோகா குறித்த சந்தேகம் இருந்தால் pathanjaliyogam@gmail.com என்ற ஈமெயிலுக்கு எழுதி அனுப்புங்கள்,

யோகக் கலைமாமணி
பி,கிருஷ்ணன் பாலாஜி M.A.(YOGA)

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More