செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் இம்மாத இறுதியில் இந்தியா வரவுள்ள இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக் – என்ன காரணம்?

இம்மாத இறுதியில் இந்தியா வரவுள்ள இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக் – என்ன காரணம்?

1 minutes read

இம்மாத இறுதியில் இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக் இந்தியாவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் வருகிற 28ஆம் திகதி இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

ஜி-20 உச்சி மாநாடு

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், கடந்த மாதம் இந்தியாவில் நடந்த ஜி-20 உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார். இதில் அவர் இந்திய பிரதமர் மோடியுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.

தற்போது, இந்தியா-இங்கிலாந்து இடையே வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்யும் பணிகள் நடந்து வருவதால், பிரதமர் ரிஷிசுனக் இந்தியா வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது.

வர்த்தக ஒப்பந்தத்தில் உள்ள 26 அத்தியாயங்களில் 24 அத்தியாயங்களை இரு தரப்பும் இறுதி செய்துவிட்டதாகவும், சில விஷயங்களில் உள்ள வேறுபாடுகளை களைவதன் மூலம் ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் இரு தரப்பினரும் தீவிரமாக உள்ளதாக இந்திய அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் ரிஷிசுனக்கின் இந்திய விஜயத்தில் இரு நாடுகள் இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் அந்த தகவல்கள் கூறுகின்றனர்.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி

இதேவேளை, இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை 29ஆம் திகதி லக்னோவில் ரிஷிசுனக் நேரில் சென்று பார்க்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அத்துடன், இந்தியாவுக்கு வருகை தர உள்ள இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக், வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More