செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் சூடான் உள்நாட்டு போர்: பலி எண்ணிக்கை 528 ஆக உயர்வு

சூடான் உள்நாட்டு போர்: பலி எண்ணிக்கை 528 ஆக உயர்வு

0 minutes read

சூடானில் இராணுவ ஆட்சி நடந்து வருகிற நிலையில், இதற்கு துணை இராணுவம் எதிர்ப்பு தெரிவித்து வந்தது.

இந்த நிலையில் கடந்த மாதம் 15 ஆம் திகதி தலைநகர் கார்டூமில் உள்ள ஜனாதிபதி மாளிகை மற்றும் சர்வதேச விமான நிலையம் போன்றவற்றை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக துணை இராணுவம் அறிவித்தது.

இதனையடுத்து இந்த மோதல் உள்நாட்டு போராக உருவெடுத்தது. இதனால் அப்பாவி பொதுமக்கள், வெளிநாட்டினர் உள்பட பலர் உயிரிழந்தனர்.

பல நாடுகள் தங்களது நாட்டின் தூதரக அதிகாரிகள், பொதுமக்களை விமானங்கள் மூலம் பத்திரமாக தாயகம் திரும்ப ஏற்பாடு செய்தனர்.

3 வாரங்களை தாண்டி நடந்து வரும் இந்த உள்நாட்டு போரால் பலியானோரின் எண்ணிக்கை 528 ஆக உயர்ந்துள்ளது.

அதேபோல் 4 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More