செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் இலண்டனில் வெள்ளப்பெருக்கு; வேனில் இருந்து மீட்கப்பட்ட நபர்!

இலண்டனில் வெள்ளப்பெருக்கு; வேனில் இருந்து மீட்கப்பட்ட நபர்!

0 minutes read

இலண்டனில் நேற்று புதன்கிழமை மாலை பெய்த கனமழையால் பெரும் வெள்ளம் ஏற்பட்டதால், வேனில் இருந்து நபர் ஒருவர் மீட்கப்பட்டதுடன், 14 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

வெம்ப்லியில் சுமார் 40 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டனர்.

இதற்கிடையில், சுற்றுச்சூழல் நிறுவனம், தேம்ஸ் நதியை சுற்றியுள்ள பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இன்று வியாழக்கிழமை அதிகாலையில் அதிக அலைகள் இருக்கும் என்று எச்சரித்துள்ளதுடன், மேலும் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.

நேற்று புதன்கிழமை மாலை வெம்ப்லியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வீதியில் நீரில் மூழ்கியிருப்பதையும், நிறுத்தப்பட்டிருந்த கார்கள் சுமார் 10 அங்குல வெள்ள நீரில் சிக்கியதையும் காட்டுகின்றன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More