செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்தும் மசோதா நிறைவேற்றம்

புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்தும் மசோதா நிறைவேற்றம்

1 minutes read

புகலிடக் கோரிக்கையாளர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் மசோதா, இங்கிலாந்து பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இதன்படி, இங்கிலாந்திற்குள் சிறிய படகுகளில் சட்டவிரோதமாக நுழைந்து புகலிடம் கோருவோர் அவர்களின் புகலிடக் கோரிக்கை பரிசீலிக்கப்படும் வரை, ஏதாவது ஒரு ஆப்பிரிக்க நாட்டிலேயே தங்கவைக்கப்படவுள்ளனர்.

மேலும், அவர்களின் புகலிடக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், அவர்கள் ருவண்டாவிலேயே வாழ அனுமதிக்கப்படுவார்கள் அல்லது வேறு ஏதேனும் ஒரு நாட்டுக்குத்தான் கொண்டு செல்லப்படுவார்கள். எக்காரணம் கொண்டும் புகலிடக் கோரிக்கையாளர்கள் இங்கிலாந்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

இவ்வாறாக புகலிடக் கோரிக்கையாளர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்துவது தொடர்பாக சட்டத்தை இயற்ற ரிஷி சுனக் தலைமையிலான அரசு கடுமையாக முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

அவ்வகையில், ருவாண்டா திட்டம் தொடர்பான மசோதா, இங்கிலாந்து பாராளுமன்றத்தில் நேற்று (12) முன்வைக்கப்பட்டது.

அந்த மசோதாவை எதிர்க்கட்சியினர் மட்டுமின்றி, ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் எதிர்த்துவந்தார்கள்.

ஆனால், வாக்கெடுப்பிலோ, அந்த மசோதாவுக்கு ஆதரவாக 313 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க, மசோதா வெற்றி பெற்றது.

இது பிரதமர் ரிஷிக்கு வெற்றியாக கருதப்பட்டாலும், பிரித்தானியாவைப் பொருத்தவரை, ஒரு மசோதா சட்டமாக்கப்படவேண்டுமானால், அது ஏழு படிகளைத் தாண்டி வரவேண்டும். ஆக, முதல் படியில்தான் ரிஷி வெற்றிபெற்றுள்ளார்.

அவர் மசோதாவில் சில சட்டத்திருத்தங்கள் கொண்டுவராவிட்டால், அடுத்தடுத்த கட்டங்களில் அவரது மசோதாவை தோற்கடித்துவிடுவோம் என்று மசோதாவை எதிர்க்கும் அவரது கட்சியைச் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கூறியுள்ளார்கள்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More