ஒரு காலத்தில் உலகிலேயே மிகவும் ஆபத்தான கைதிகள் அடைக்கப் பயன்பட்ட அல்காட்ராஸ் சிறைச்சாலை பராமரிப்பு சிக்கல்கள் காரணமாக மூடப்பட்டது. பின் நாளில் இது சுற்றுலாத் தளமாக மாற்றப்பட்டது.
ஆனால், அமெரிக்க ஜனாதிபதி டோனல்ட் டிரம்ப் உத்தரவுக்கு அமைய இச்சிறைச்சாலை மீண்டும் திறக்கப்படவுள்ளது.
அல்காட்ராஸ் சிறை அமெரிக்கக் கடற்கரைகளில் அமைந்துள்ளது. சுற்றிலும் நீர், அதி ஆபத்தான சுறாக்களைக் கொண்ட இந்தச் சிறை பல ஆண்டுகளாகவே பயன்பாட்டில் இல்லாமல் இருந்தது.
இதற்கிடையே 1963 இல் மூடப்பட்ட ஓர் அமெரிக்காவின் மிக மோசமான சிறைகளில் ஒன்றை மீண்டும் திறக்க உத்தரவிட்டுள்ள டிரம்ப், அதை விரிவுபடுத்தவும் ஆணையிட்டுள்ளார்.
தற்போது இது சுற்றுலா தளமாக உள்ள நிலையில், மீண்டும் இது சிறையாக மாறவுள்ளது.
இனி அமெரிக்க நாட்டின் மிகவும் இரக்கமற்ற மற்றும் வன்முறை குற்றவாளிகள் இந்தச் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.