திருகோணமலை மாவட்டத்தில் அதிக டெங்கு நோயாளர் பதிவாகி வருகின்றனர் .வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 3,000 இற்கும் அதிகமானோர் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் மிகக் குறைந்தளவானோரே டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் அருண ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.
டெங்கு ஒழிப்புப் பணியகத்தின் கள ஆய்வு நடவடிக்கைகள் நாளாந்தம் முன்னெடுக்கப்படுவதாகவும் விசேட வைத்திய நிபுணர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.