செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைப்பதே முதற் கட்ட பணி!

இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைப்பதே முதற் கட்ட பணி!

0 minutes read

அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்து மக்களுக்கு நிவாரணம் அளிப்பதே எமது முதற்கட்ட செயற்பாடாக இருக்கும். மூன்று வேளை உணவை கூட பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் மக்கள் இன்று திண்டாடுகின்றனர் என நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதற்கு அனைத்து தரப்பினர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என உள்ளூராட்சி மன்ற பிரதானிகளிடம் கோரிக்கையும் விடுத்துள்ளார். நிதியமைச்சருக்கும் உள்ளூராட்சி மன்ற பிரதானிகளுக்கும் இடையிலான சந்திப்பு அலரி மாளிகையில் இடம்பெற்றது.இந்நிகழ்வில் உரையாற்றும் போதே நிதியமைச்சர் பெசில் ராஜபக்ச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மூன்று வேளையும் உணவு பெற்றுக் கொள்ள வசதியில்லாத மக்கள் வாழ்கிறார்கள். இவர்கள் குறித்து அரசாங்கம் அதிக கவனம் செலுத்த வேண்டும் .

பல்வேறு எதிர்பார்ப்புக்கு மத்தியில் மக்கள் ஆட்சியதிகாரத்தை கையளித்துள்ளார்கள்.

ஆகவே அரிசி உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைப்பதற்கு அரசாங்கம் அதிக கவனம் செலுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More