செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை சமூக வலைத்தளங்களின் ஊடாக வன்முறைகளில் ஈடுபடுவோரை கைதுசெய்ய நடவடிக்கை

சமூக வலைத்தளங்களின் ஊடாக வன்முறைகளில் ஈடுபடுவோரை கைதுசெய்ய நடவடிக்கை

1 minutes read

மூக வலைத்தளங்கள் ஊடாக தொடர்புகளை ஏற்படுத்தி வன்முறைகளில் ஈடுபடும் கும்பல்களை இனங்கண்டு, அவர்களை கைதுசெய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, பூவசரங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தட்டான்குளம், செட்டிக்குளம் ஆகிய பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் குழுவொன்று ‘கெத்து பசங்க’ எனும் பெயரில் வட்ஸ்அப் குழுவொன்றின் ஊடாக தொடர்புகளை பேணி வன்முறை சம்பவம் ஒன்றில் ஈடுபடவிருந்தபோது பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், நான்கு இளைஞர்களை பொலிஸார் கைதுசெய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கின் ஏனைய பகுதிகளில் முகநூல், வட்ஸ்அப், டிக்டொக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் ஊடாக ஒன்றிணைந்து தமக்குள் தொடர்புகளை பேணி வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்ற சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில், அது தொடர்பில் விசேட நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

அதன்படி, கடந்த வாரம் யாழ்ப்பாணம், நல்லூர் அரசடி பகுதியில் இளைஞர் குழுவொன்று வன்முறைக்கு தயாராகியுள்ளமை தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், அவ்விடத்துக்கு பொலிஸார் விரைந்து சென்றுள்ளனர்.

அப்போது பொலிஸாரை கண்டதும் வன்முறை கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More