செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை 420 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது!

420 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது!

0 minutes read

யாழ்ப்பாணம், அனலைதீவு கடற்பரப்பில் இன்று 420 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அனலைதீவு கடற்பரப்பில் சந்தேகத்துக்கிடமான முறையில் பயணித்த இரண்டு படகுகளைக் கடற்படையினர் கடலில் வழிமறித்துச் சோதனையிட்ட போது, இரண்டு படகுகளில் இருந்தும் 420 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டது.

அத்துடன் இரண்டு படகுகளில் இருந்த இருவரையும் கடற்படையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் அனலைதீவு பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று கடற்படையினர் தெரிவித்தனர்.

மேலதிக சட்ட நடவடிக்கைக்காகக் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களையும், மீட்கப்பட்ட கஞ்சாவையும் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் கடற்படையினர் மேலும் குறிப்பிட்டனர்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More