செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை காதலனுக்கு கைவிலங்கிட்டு காதலியை இழுத்துச் சென்று துஷ்பிரயோகத்துக்கு முயற்சித்த பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

காதலனுக்கு கைவிலங்கிட்டு காதலியை இழுத்துச் சென்று துஷ்பிரயோகத்துக்கு முயற்சித்த பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

0 minutes read

சமனலவெவ அணைக்கட்டுக்கு  சென்றிருந்த  18 வயது யுவதியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த யுவதி தனது காதலனுடன் அணைக்கட்டு பகுதிக்குச்  சென்றுள்ளார், இதன்போது  சந்தேக நபரான கான்ஸ்டபிள்  காதலனின் கைகளுக்கு  கைவிலங்கிட்டு  யுவதியை வனப்பகுதிக்கு இழுத்துச் சென்றுள்ளார்.

பின்னர் அங்கு வைத்து  குறித்த கான்ஸ்டபிள் யுவதியின் ஆடைகளை கழற்றி புகைப்படம் எடுத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

யுவதியைக் காட்டுப் பகுதிக்குள் இழுத்துச் செல்வதைக் கண்ட கிராமவாசி ஒருவர் பொலிஸாருக்குத் தகவல் கொடுத்ததையடுத்து, அந்த கான்ஸ்டபிள் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சிக்கும் முன்னர் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் ஒலிய பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடையவர் எனவும் ஹம்பேகமுவ  பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More