செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பிரான்ஸில் கைதான ‘இரத்மலானே குடு அஞ்சு’வை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை!

பிரான்ஸில் கைதான ‘இரத்மலானே குடு அஞ்சு’வை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை!

0 minutes read

பிரான்ஸ் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட பாரிய போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலகத் தலைவனுமான ‘இரத்மலானே குடு அஞ்சு’ என அழைக்கப்படும் சிங்கரகே சமிந்த சில்வாவை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் கடத்தல் மற்றும் பல கொலைகளில் சந்தேக நபராக கருதப்படும் ‘குடு அஞ்சு’ என்பவரை பிரான்ஸ் பொலிஸார் கடந்த புதன்கிழமை கைதுசெய்துள்ளதாகவும், பிரான்ஸ் பாதுகாப்பு தரப்பினர் இலங்கை அரசாங்கத்துக்கு  உத்தியோகபூர்வமாக இதனை  அறிவித்துள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

குடும்பத் தகராறு தொடர்பாக அவரது மனைவி பிரான்ஸ் பொலிஸில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், ‘குடு அஞ்சு’ கைதுசெய்யப்பட்டதாக கூறப்படும் பொதுப் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரி, இவரை நாட்டுக்கு அழைத்து வரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More