புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வெளிநாடுகளில் வேலை என 7 இலட்சம் ரூபா மோசடி | பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

வெளிநாடுகளில் வேலை என 7 இலட்சம் ரூபா மோசடி | பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

0 minutes read

வெளிநாடுகளில் வேலை வழங்குவதாக கூறி 7 இலட்சம் ரூபா பணத்தை பெற்று ஏமாற்றியதாக கூறப்படும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சட்டப்பிரிவு அதிகாரிகளினால் பொலிஸ் கான்ஸ்டபிள் நேற்று சனிக்கிழமை (15) கைது செய்யப்பட்டுள்ளார்.

அகலவத்தை பொலிஸில் கடமையாற்றும் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் இமதுவ, பத்தேமுல்ல பிரதேசத்தை சேர்ந்த 54 வயதானவராவார்.

அகலவத்தை பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தரப்பு தெரிவிக்கிறது. சந்தேக நபர் மத்துகம நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More