சீமா தாகா, மீட்ட 76 குழந்தைகளில் 56 பேர் 14 வயதுக்குட்பட்டவர்கள். டெல்லி மட்டுமல்லாது பஞ்சாப், மேற்கு வங்கம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் சீமா குழந்தைகளை மீட்டார்.
டெல்லியின் சமயபூர் பத்லி காவல் நிலையத்தை சேர்ந்த தலைமை கான்ஸ்டபிளான சீமா தாகா, கடந்த வருடம், காணாமல் போன 76 குழந்தைகளை மூன்று மாதத்திற்குள் மீட்டார். இதனால் அவருக்கு துணை ஆய்வாளராக பதவி உயர்வு கிடைத்தது.
சீமா தாகா, மீட்ட 76 குழந்தைகளில் 56 பேர் 14 வயதுக்குட்பட்டவர்கள். டெல்லி மட்டுமல்லாது பஞ்சாப், மேற்கு வங்கம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் சீமா குழந்தைகளை மீட்டார். 20 வயதில் இருந்து காவல்துறையில் பணிபுரிய ஆரம்பித்த சீமா, அவரது கல்லூரியிலிருந்து தேர்வாகி, நேர்காணலின் மூலம் போலீஸ் வேலை கிடைத்த ஒரே நபராவார். சீமாவின் கணவரும் காவல்துறை அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், தற்போது சீமாவின் இந்தச் சாதனை பற்றிய புதிய வெப் தொடர் உருவாகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி உள்ளது. தற்போது இந்த வெப் தொடருக்கான முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் சீமா தாகா வேடத்தில் நடிக்கப்போவது யார் என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.