2021 வீதி பாதுகாப்பு டி-20 உலக சம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டியில் இரண்டாம் இடம்பிடித்த இலங்கை லெஜண்ட்ஸ் அணி நேற்று மாலை கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
இந்தியாவின் சென்னையிலிருந்து இண்டிகோ ஏயர்லைன்ஸ் விமானம் 6E9912 மூலமாக இலங்கை லெஜண்ட்ஸ் அணியினர் நேறறு மாலை 5.00 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
ராய்பூரில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணி இந்திய லெஜண்ட்ஸ் அணியிடம் 14 ஓட்டங்களினால் தோல்வியைத் தழுவியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.