இலங்கை அரசாங்கம் தனது கடனை நிர்வகிப்பதிலும் மேலும் நிலையான பாதையை கண்டுபிடிப்பதிலும் அமெரிக்கா உதவியளிக்கும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் எலைனா பி. டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கையில் மேலும் பொருளாதார ஸ்திரத்தன்மையைக் காண விரும்புவதாக அமெரிக்கா ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளது. அதற்கு ஆதரவளிக்க விரும்புவதாகவும் அமெரிக்க தூதுவர் எலைனா பி. டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.
முன்னோக்கிச் செல்லும்போது, இலங்கையில் பல வாய்ப்புகளும் உள்ளன, அதேநேரம் பல சவால்களுமுள்ளன, அந்த சவால்களுக்கு தீர்வு காணப்பட வேண்டுமென்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையின் கடன் சுமையை நிர்வகிக்கவும், மேலும் அதற்கான நிலையான வழியைக் கண்டறியவும் அமெரிக்கா தமது ஆதரவை வழங்கவுள்ளது. இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் எலைனா பி. டெப்லிட்ஸ் இது தொடர்பில் ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
இலங்கை அரசாங்கம் அதன் கடன் சுமை தொடர்பிலான உரிய நடைமுறையை பின்பற்ற வேண்டும், மேலும் நிலைத்தன்மையை நோக்கி முன்னேற வேண்டும். அரசாங்கம் கடனைச் சுமக்க வேண்டியது அவசியமில்லை, ஆனால் அந்தக் கடனைச் செலுத்த முடியும் என்றும் கூறியுள்ளார்.