செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கொரோனா வைரஸ்-மேலும் 38பேர் உயிரிழப்பு!

கொரோனா வைரஸ்-மேலும் 38பேர் உயிரிழப்பு!

1 minutes read

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மேலும் 38பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு, நேற்று (வியாழக்கிழமை) வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,089 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை நாட்டில் நேற்று மூவாயிரத்து 441 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 54ஆயிரத்து 784ஆக அதிகரித்துள்ளது.

மேலும் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த ஆயிரத்து 165 பேர், நேற்று வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறிய நிலையில், மொத்தமாக ஒரு இலட்சத்து 23 ஆயிரத்து 532 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

இந்நிலையில், 30 ஆயிரத்து163 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More