செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கையில் ஐந்து டிஜிட்டல் பூங்காக்களை நிர்மாணிக்க திட்டம்!

இலங்கையில் ஐந்து டிஜிட்டல் பூங்காக்களை நிர்மாணிக்க திட்டம்!

1 minutes read

டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளுக்கு இளைஞர்களை உள்வாங்கும் நோக்கத்துடன் இலங்கையில் ஐந்து டிஜிட்டல் பூங்காக்களை நிர்மாணிக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

அதன்படி, காலி, கண்டி மற்றும் குருநாகல் மாவட்டங்களில் இந்த பூங்காக்கள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் நிறுவன மேம்பாடு இராஜாங்க அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஐந்து டிஜிட்டல் பூங்காக்களில் முதலாவது பூங்காவை காலி மாவட்டத்தில் நிர்மாணிக்கும் ஆரம்ப நிகழ்வின்போது அமைச்சர் இந்த திட்டங்கள் குறித்து தெரிவித்தார்.

இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் உதவியுடன் காலியில் முதல் டிஜிட்டல் பூங்கா நிர்மாணிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More