செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கொழும்பு துறைமுக நகர சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு தொடர்பான விசாரணை!

கொழும்பு துறைமுக நகர சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு தொடர்பான விசாரணை!

1 minutes read

கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான வாக்கெடுப்பில் தவறு ஏற்பட்டதாக வெளியான குற்றச்சாட்டு தொடர்பாக இடம்பெற்ற விசாரணையின் அறிக்கை இன்று சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த விசாரணை அறிக்கையில் அடங்கியுள்ள பரிந்துரைகள் தொடர்பாக அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

குறித்த வாக்கெடுப்பின் போது, வாக்குகள் சரியாக எண்ணப்படவில்லை என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் சபாநாயகருக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டது.

குறித்த விடயம் தொடர்பான விரிவான விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் அந்த கடிதத்தினூடாக கோரப்பட்டிருந்தது.

இதற்கமைய, சபாநாயகரால் வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு ஏற்ப ஓய்வு பெற்ற நாடாளுமன்ற பொதுச்செயலாளர் ஒருவரின் தலைமையில் குழுவொன்று அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More