செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் குளிர் கால ஆரோக்கியத்திற்கு செய்ய வேண்டியவை!

குளிர் கால ஆரோக்கியத்திற்கு செய்ய வேண்டியவை!

2 minutes read

குளிர்காலத்தில் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பது மிகவும் சவாலானது. யார் வேண்டுமானாலும் நோய்வாய்ப்படலாம். குளிர்கால மாதங்களில் நம்மால் வீட்டிற்குள் அடங்கிவிட முடியாது. பண்டைய இந்திய மருத்துவ முறைபடி, சில எளிய சுய பராமரிப்பு குறிப்புகளை பின்பற்றுவதன் மூலம் குளிரை எளிதாக கையாளலாம்.

இந்த பருவத்தில், ஆரோக்கியமான மஞ்சள் பாலை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். தினமும் மஞ்சள் பால் அல்லது கோல்டன் பால் குடிப்பது மோசமான சளி மற்றும் காய்ச்சல் போன்ற பிரச்சனைகளில் இருந்து உங்களை பாதுகாப்பாக வைத்திருக்கும். மேலும் இந்த பானத்தில் லவங்கப்பட்டை தூள் மற்றும் ஏலக்காய் தூள் போன்ற சில மசாலா பொருட்களையும் சேர்த்து குடிக்கும் போது, அது மேலும் பயனுள்ளதாக இருக்கும்.

நல்லெண்ணெய் அல்லது கடுகு எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வது உடலை சூடாக வைத்திருக்கவும், குளிர் காலநிலையை எதிர்த்துப் போராடவும் உதவும். மேலும் சருமத்தை மென்மையாக வைத்திருக்கும். காலையில் குளிப்பதற்கு முன் அல்லது படுக்கைக்குச் செல்வதற்கு முன் சருமத்தில் மசாஜ் செய்யலாம். மசாஜ் செய்வது மன அமைதியையும் தருகிறது. மன அழுத்தத்தை விடுவித்து, தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துகிறது.

வறண்ட மற்றும் பிசுபிசுப்பான கூந்தல் குளிர்காலத்தின் போது மற்றொரு பொதுவான பிரச்சினையாகும். குளிர் காற்று, கூந்தலில் உள்ள அனைத்து ஈரப்பதத்தையும் எடுத்து விடும். இந்த பருவத்தில் தலைமுடியை ஊட்டமளிக்கவும் வலுப்படுத்தவும் தேங்காய் எண்ணெயை பயன்படுத்தலாம். விரல் நுனியில் தேங்காய் எண்ணெய் எடுத்து, அதை உச்சந்தலையில் மெதுவாக மசாஜ் செய்யுங்கள். தேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வது கூந்தலை வலுவாகவும் பளபளப்பாகவும் வைக்க உதவும்.

கோடை காலத்துடன் ஒப்பிடுகையில் குளிர்காலத்தில் நமது செரிமான அமைப்பு பலவீனமாக உள்ளது. எனவே, இந்த பருவத்தில் குளிர்ந்த உணவை தவிர்க்க முயற்சிக்கவும். குளிர்ந்த உணவை உண்ணும் போது, உங்கள் செரிமான அமைப்பு அதை செரிமானம் செய்ய கடினமாக உழைக்க வேண்டும். இது பெரும்பாலும் அஜீரணத்திற்கு வழிவகுக்கிறது. பிற வயிறு பிரச்சினைகளையும் ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியமாக இருக்க சூடான மற்றும் செரிமானம் ஆகக்கூடிய உணவை சாப்பிடுங்கள்.

எந்த பருவத்திலும் ஆரோக்கியமாக இருக்க, சுறுசுறுப்பாக இருப்பது அவசியம். குளிர்காலத்தில், காலையில் எழுந்து நடைபயிற்சி செல்வது கொஞ்சம் கடினம் தான். ஆனால் உடலை வலுவாக வைத்திருக்க அதை செய்ய வேண்டியது அவசியம். நீங்கள் வெளியே சென்று பயிற்சி செய்ய விரும்பவில்லை என்றால், வீட்டில் யோகா போன்ற பயிற்சிகளை செய்யலாம். எந்த வகையான உடற்பயிற்சி செய்தாலும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்பதே முக்கியம்.

நன்றி-மாலை மலர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More