செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வீதி விபத்துகளால் நேற்று 10 பேர் பலி

வீதி விபத்துகளால் நேற்று 10 பேர் பலி

1 minutes read

நாட்டில் நேற்றைய தினம் வீதி விபத்துக்கள் காரணமாக பத்து உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவற்றில் ஒன்பது பேர் மோட்டர் சைக்கிளில் பயணித்தவர்கள் ஆவர். ஒருவர் முச்சக்கர வண்டியில் பயணித்தவர் ஆவார்.

இலங்கை பொலிஸாரின் புள்ளி விபரங்களின்படி, ஒவ்வொரு நாளும் ஏழிலிருந்து எட்டு பேர் வீதி விபத்துக்கள் காரணமாக உயிரிழக்கின்றனர்.

நாட்டில் பதிவுசெய்யப்பட்ட மொத்த வாகனங்களின் எண்ணிக்கை 8.3 மில்லியன் மற்றும் அதில் 60 சதவீதம் மோட்டார் சைக்கிள்கள் என பட்டியலிடப்பட்டுள்ளது. 

2017 இல் இலங்கையின் மோட்டார் வாகன மக்கள் தொகை 7.2 மில்லியனாக இருந்தது. 

இந்த ஆண்டு இதுவரை வீதி விபத்துகளால் சுமார் 1500 பேர் உயிரிழந்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More