செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை புதையல் அகழ்வில் ஈடுபட்ட 15 பேர் கைது: பொலிஸ் பேச்சாளர்

புதையல் அகழ்வில் ஈடுபட்ட 15 பேர் கைது: பொலிஸ் பேச்சாளர்

1 minutes read

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறியும் தொல்பொருளியல் சட்டத்தை மீறியும் புதையல் அகழ்வில் ஈடுபட்ட 15 சந்தேக நபர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

ஹீனியாகல பொலிஸ் பிரிவில் பரகஹாகல பிரதேசத்தில் புதையல் அகழ்வில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் போது 4 மோட்டார் சைக்கிள்களும் , புதையல் அகழ்விற்காக உபயோகிக்கப்படும் உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன.

ஹசலக பொலிஸ் பிரிவில்  புதையல் அகழ்வில் ஈடுபட்ட 6 பேரும், விசேட அதிரடிப்படையினரால் மாவத்தகம பொலிஸ் பிரிவில் வேவுட – யட்டிவில பிரதேசத்தில் புதையல் அகழ்வில் ஈடுபட்ட 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் அந்தந்த பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More