இதனையடுத்து, நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து 786 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்று உறுதியான மேலும் 642 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 15 ஆயிரத்து 234 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 4 இலட்சத்து 56 ஆயிரத்து 87 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 46 ஆயிரத்து 416 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.