செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு ஐ.பி.எல்.: ஒன்பதாவது முறையாக இறுதிப் போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது சென்னை சுப்பர் கிங்ஸ் அணி!

ஐ.பி.எல்.: ஒன்பதாவது முறையாக இறுதிப் போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது சென்னை சுப்பர் கிங்ஸ் அணி!

1 minutes read

ஐ.பி.எல். ரி-20 தொடரின் இறுதிப் போட்டிக்கான முதலாவது தகுதிப் போட்டியில், சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக தேர்வாகியுள்ளது.

டுபாயில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில், சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும் டெல்லி கெபிடல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சென்னை சுப்பர் கிங்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி கெபிடல்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 172 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, பிரித்வீ ஷா 60 ஓட்டங்களையும் ரிஷப் பந்த் ஆட்டமிழக்காது 51 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

சென்னை அணியின் பந்துவீச்சில், ஹசில்வுட் 2 விக்கெட்டுகளையும் ஜடேஜா, மொயின் அலி மற்றும் பிராவோ ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 173 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி, 19.4 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் சென்னை அணி 4 விக்கெட்டுகளால் வெற்றிபெற்று ஒன்பதாவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக ருத்துராஜ் கெய்க்வாட் 70 ஓட்டங்களையும் ரொபின் உத்தப்பா 63 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

டெல்லி அணியின் பந்துவீச்சில், டொம் கர்ரன் 3 விக்கெட்டுகளையும் ஹென்ரிச் நோட்ஜே மற்றும் அவிஷ்கான் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக 50 பந்துகளில் 2 சிக்ஸர்கள் 5 பவுண்ரிகள் அடங்களாக 70 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட ருத்துராஜ் கெய்க்வாட் தெரிவுசெய்யப்பட்டார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More