செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு ஐ.பி.எல்.: இறுதிப் போட்டிக்குள் நுழையப் போகும் இரண்டாவது அணி எது?

ஐ.பி.எல்.: இறுதிப் போட்டிக்குள் நுழையப் போகும் இரண்டாவது அணி எது?

1 minutes read

ஐ.பி.எல். ரி-20 தொடரின் இறுதிப் போட்டிக்கான இரண்டாவது தகுதிப் போட்டி, இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

சார்ஜாவில் இன்று (புதன்கிழமை) நடைபெறவுள்ள இப்போட்டியில், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் டெல்லி கெபிடல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இப்போட்டியில் வெற்றிபெறும் அணியே இறுதிப் போட்டியில், சென்னை சுப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்ளும் என்பதால், இப்போட்டியின் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.

ஏற்கனவே நடப்பு தொடரில் இரு அணிகளும் மோதிய இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பதிவுசெய்துள்ளன.

இரு அணிகளும் இதுவரை 28 முறை மோதியுள்ளன. இதில் 12 முறை டெல்லி அணியும் 15முறை கொல்கத்தா அணியும் வெற்றிபெற்றுள்ளன. ஒரு போட்டிக்கு முடிவு இல்லை.

சம்பியன் கிண்ணத்துக்கான இறுதிப் போட்டி, எதிர்வரும் 15ஆம் திகதி டுபாயில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More