செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு ரி-20 உலகக்கிண்ணம்: பரபரப்பான போட்டியில் பங்களாதேஷை வீழ்த்தியது மேற்கிந்திய தீவுகள் அணி!

ரி-20 உலகக்கிண்ணம்: பரபரப்பான போட்டியில் பங்களாதேஷை வீழ்த்தியது மேற்கிந்திய தீவுகள் அணி!

1 minutes read

ரி-20 உலகக்கிண்ண தொடரின் 23ஆவது லீக் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி 3 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

சார்ஜாவில் நேற்று (வெள்ளிக்கிழமை) குழு 1இல் நடைபெற்ற இப்போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணியும் பங்களாதேஷ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 142 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, நிக்கோலஸ் பூரான் 40 ஓட்டங்களையும் ரோஸ்டன் சேஸ் 39 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில், மெயிடி ஹசன், முஷ்டபிசுர் ரஹ்மான் மற்றும் சொரிபுல் இஸ்லாம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 143 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய பங்களாதேஷ் அணியால், 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 139 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால் மேற்கிந்திய தீவுகள் அணி 3 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, லிடொன் தாஸ் 44 ஓட்டங்களையும் மொஹமதுல்லா ஆட்டமிழக்காது 31 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், ராம்போல், ஜேஸன் ஹோல்டர், ஆந்ரே ரஸ்ஸல், அகீல் ஹொசைன் மற்றும் டுவைன் பிராவோ ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக 22 பந்துகளில் 4 சிக்ஸர்கள் 1 பவுண்ரி அடங்களாக 40 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட நிக்கோலஸ் பூரான் தெரிவுசெய்யப்பட்டார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More