செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை நாடு எந்த நேரத்திலும் முடக்கப்படலாம் – வெளியான அறிவிப்பு

நாடு எந்த நேரத்திலும் முடக்கப்படலாம் – வெளியான அறிவிப்பு

1 minutes read

நாட்டை முடக்குவதற்கான தீர்மானம் எந்த நேரத்திலும் எடுக்கப்படலாம் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் அறிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் தற்போது மக்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி செயற்படும் நிலை குறைந்து வருகிறது. சிலர் பொது இடங்களில் முகக்கவசம் அணியாமலும் இருக்கின்றனர்.

மீண்டுமொரு முடக்க தேவையா இல்லையா என்பதை நாட்டு மக்களின் நடத்தையே தீர்மானிக்கும். எதிர்வரும் கிறிஸ்மஸ் காலத்தில் நாடு மூடப்பட வேண்டும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டால் அதிர்ச்சியடைய வேண்டாம்.

தற்போதைய, தீவிரமான சூழ்நிலையிலிருந்து மீள முயற்சிக்கும் நேரத்தில் இது போன்ற கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்வதையும் பங்கேற்பதையும் தவிர்க்குமாறு கோருகிறேன். உரிய தரப்பினரிடம் அனுமதி பெறாது முன்னெடுக்கப்படும் நிகழ்வுகள் ரத்து செய்யப்படலாம்.

அனுமதி பெறாமல் இது போன்ற நிகழ்வுகளை ஏற்பாடு செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும். நாட்டை முடக்கும் நடவடிக்கையானது எந்த நேரத்திலும் எடுக்கக்கூடியதொன்று.

அதற்கான சுகாதார வழிகாட்டல்களை மாத்திரமே வெளியிடப்பட வேண்டியுள்ளது என குறிப்பிட்டுள்ளார். 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More