செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை எரிவாயு விவகாரம் -அரச நிறுவனங்களுக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!

எரிவாயு விவகாரம் -அரச நிறுவனங்களுக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!

1 minutes read

எரிவாயு விவகாரத்தில், அரச நிறுவனங்களின் அலட்சியம் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

நுகர்வோர் விவகார அதிகார சபை, இலங்கை கட்டளைகள் நிறுவனம், மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு ஆகியவற்றுக்கே இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

அதாவது எரிவாயு விவகாரத்தில் அரச நிறுவனங்களின் அலட்சியம் குறத்து இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் குழு ஆகியன இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளன.

குறித்த முறைப்பாட்டுக்கமைய, இலங்கை கட்டளைகள் நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம், நுகர்வோர் விவகார அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர் ஆகியோரை இன்று காலை 11 மணிக்கு ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More