செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு இந்திய அணியின் முழுநேர ஒரு நாள்- ரி-20 அணியின் தலைவரானார் ரோஹித் ஷர்மா!

இந்திய அணியின் முழுநேர ஒரு நாள்- ரி-20 அணியின் தலைவரானார் ரோஹித் ஷர்மா!

1 minutes read

இந்தியக் கிரிக்கெட் அணியின் முழுநேர ஒருநாள் மற்றும் ரி-20 அணியின் தலைவராக, ரோஹித் ஷர்மா தேர்வுக் குழுவால் நியமிக்கப்பட்டுள்ளதாக இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டுப் சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை எதிர்வரும் டெஸ்ட் தொடருக்கான அணியை விராட் கோஹ்லி தொடர்ந்து வழிநடத்தும் அதே வேளையில், ரோஹித் சர்மா துணைத் தலைவராகவும் உயர்த்தப்பட்டுள்ளார்.

இந்தியாவின் முழுநேர அணித்தலைவராக 78 ஒருநாள் போட்டிகளில் இருந்து 51 வெற்றிகளுடன் கோஹ்லி தனது பதவிக் காலத்தை முடித்துள்ளார்.

இதற்கமைய தற்போது எதிர்வரும் தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய டெஸ்ட் அணி விபரமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய டெஸ்ட் அணி விபரம்: விராட் கோஹ்லி தலைமையிலான அணியில், ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால், புஜாரா, அஜிங்க்யா ரஹானே, ஷ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த், விருத்திமான் சஹா, அஸ்வின், ஜெயந்த் யாதவ், இஷாந்த் சர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ்.

காத்திருப்பு வீரர்கள்: நவ்தீப் சைனி, சவுரப் குமார், தீபக் சாஹர், அர்சான் நக்வாஸ்வல்லா.

இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறுகின்றது.
இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 26ஆம் திகதி செஞ்சூரியன் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More