இலங்கை அணியின் முன்னாள் வீரரும் தற்போதைய பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளருமான ரங்கன ஹேரத் கொவிட்-19 க்கு சாதகமாக சோதனை மேற்கொண்டுள்ளார்.
பங்களாதேஷ் அணியுடன் இணைந்து நியூஸிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொவிட்-19 தொற்று தொடர்பான இலகுவான அறிகுறிகளை ஹேரத் வெளிப்படுத்தியதாகவும், பின்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் அணியின் ஏனைய உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் பங்களாதேஷ் அணியின் ஏனைய வீரர்களும், பயிற்சி மற்றும் பணியாளர்களும் இதுவரை கொவிட் தொற்று தொடர்பான எந்தவொரு அறிகுறிகளையும் வெளிப்படுத்தவில்லை.
பங்களாதேஷ் அணியில் உள்ள அனைவருக்கும் மேற்கொள்ளப்பட்ட முதல் இரண்டு கொவிட் சோதனைகளில் எதிர்மறையான முடிவுகளை வெளிப்படுத்தியுள்ளனர் என்றும் அந்த வட்டாரம் கூறியுள்ளது.
நியூசிலாந்துக்கான சுற்றுப்பயணத்தில் பங்களாதேஷ் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.
முதல் டெஸ்ட் ஜனவரி 1 ஆம் திகதி மவுண்ட் மாங்கனுய் மைதானத்திலும், இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிறிஸ்ட்சர்ச்சில் ஜனவரி 9 ஆம் திகதியும் தொடங்கும்.