செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை 21ஆம் நூற்றாண்டில் வாகன இறக்குமதியை தடை செய்த நாடு இலங்கையே!

21ஆம் நூற்றாண்டில் வாகன இறக்குமதியை தடை செய்த நாடு இலங்கையே!

1 minutes read

தற்போது வாகனம் என்பது ஆடம்பர பொருள் அல்ல என்றும் அத்தியாவசிய பொருளென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மக்களுக்கு இவ்வாறான அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதி தடையாகியுள்ள நிலையில் மக்கள் அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வாகன இறக்குமதி மீது விதிக்கப்படும் வரி வீதம் மிகவும் அதிகம் என்றும் வாகனத்தின் விலையை விடவும் நூற்றுக்கு 200 தொடக்கம் 300 வீதம் வரி விதிக்கப்படுகின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் தான் நாட்டில் வாகனங்களுக்கான விலை அதிகமாக காணப்படுகிறது என்றும் ஐரோப்பிய நாடுகளில் வாகனங்களுக்கான விலை மிகவும் குறைவாக காணப்படுகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது குறித்த வரி விதிப்பின் காரணமாக எமது நாட்டில் நான்கு மடங்கு விலை அதிகமாக காணப்படுகின்றதென்றும் தற்போது அந்த விலை அதிகரிப்பைவிட வாகன இறக்குமதி தடையின் காரணமாக பல மடங்கு அதிகரித்துள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More