செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி சுற்றி வளைப்பு

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி சுற்றி வளைப்பு

1 minutes read

கல்கிஸை, இரத்மலானை பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதியொன்று சுற்றி வளைக்கப்பட்டதில், முகாமையாளர் உட்பட ஐந்து பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கல்கிஸை குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கு இணங்க நேற்று மாலை இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கைதான சந்தேக நபர்கள் 40, 32, 43 மற்றும் 25 வயதுடைய இரத்மலானை, போகஸ்வெவ, பிடபெத்தர மற்றும் பண்டாரவளை பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

சந்தேக நபர்கள் இன்று கல்கிஸை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். இது தொடர்பில் கல்கிஸை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More