செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பொது இணைக்க ஆவணம் ஒன்றினை தயாரிக்க தமிழ் பேசும் கட்சிகள் இணக்கம்!

பொது இணைக்க ஆவணம் ஒன்றினை தயாரிக்க தமிழ் பேசும் கட்சிகள் இணக்கம்!

1 minutes read

இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் அபிலாஷைகள் மற்றும் எதிர்பார்ப்புக்களை ஒன்றுபட்டு பிரதிபலிக்கும் ஆவணம் ஒன்றினை தயாரிப்பதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை இடம்பெற்ற சந்திப்பில், குறித்த பொது ஆவணத்தை காலம் தாழ்த்தாது விரைந்து தயாரிக்க தீர்மானிக்கப்பட்டது.

கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் இல்லத்தில் இடம்பெற்ற குறித்த சந்திப்பில், மனோ கணேசன் ரவூப் ஹக்கீம், சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என்ற ஒருமித்த கருத்திற்கு அமைவாக குறித்த ஆவணத்தை வெகுவிரைவில் தயாரிக்க தீர்மானிக்கப்பட்டதாக எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டார்.

இதன் அடிப்படையில் தமிழ் பேசும் கட்சிகளின் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று சுமந்திரனின் இல்லத்தில் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More