செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு ரி-20: மேற்கிந்திய தீவுகள் அணியை வயிட் வோஷ் செய்தது இந்தியா அணி!

ரி-20: மேற்கிந்திய தீவுகள் அணியை வயிட் வோஷ் செய்தது இந்தியா அணி!

1 minutes read

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான ரி-20 போட்டியில், இந்தியா அணி 17 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரை இந்தியக் கிரிக்கெட் அணி, 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியுள்ளது

கொல்கத்தா- ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியக் கிரிக்கெட் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில், 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 184 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சூர்யகுமார் யாதவ் 65 ஓட்டங்களையும் வெங்கடேஷ் ஐயர் ஆட்டமிழக்காது 35 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், ஜேஸன் ஹோல்டர், ரொமாறியோ செப்பர்ட், ரோஸ்டன் சேஸ், ஹெய்டன் வோல்ஷ் மற்றும் டோமினிக் ட்ரேக்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 185 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியால், 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 167 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால், இந்தியா அணி 17 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, நிக்கோலஸ் பூரான் 61 ஓட்டங்களையும் ரொமாறியோ செப்பர்ட் 29 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், ஹர்சல் பட்டேல் 3 விக்கெட்டுகளையும் தீபக் சஹார், வெங்டடேஷ் ஐயர், சர்துல் தாகூர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுளையும் பெற்றுக்கொண்டனர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாகவும் தொடரின் நாயகனாகவும் இந்தியக் கிரிக்கெட் அணியின் சூர்ய குமார் யாதவ் தெரிவுசெய்யப்பட்டார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More