கபாப்பில் நிறைய வெரைட்டிகள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் கல்மி கபாப். பொதுவாக இதனை ஹோட்டல்களில் வாங்கி தான் சாப்பிடுவோம். ஆனால் நாளை வார விடுமுறையில் இந்த கல்மி கபாப்பை வீட்டிலேயே செய்து சாப்பிடுங்கள்.
தேவையான பொருட்கள்:
சிக்கன் – 1 கிலோ (துண்டுகளாக்கப்பட்டது) இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தயிர் – 1 கப்
குங்குமப்பூ – 1 சிட்டிகை
எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்
மைதா – 1/4 கப்
மசாலாவிற்கு…
கிராம்பு – 3
வெங்காய விதை/பேஸ்ட் – 1/2 டீஸ்பூன்
பட்டை – 1
பிரியாணி இலை – 1
மிளகு – 5
செய்முறை:
முதலில் மசாலாவிற்கு கொடுத்த பொருட்கள் அனைத்தையும் வாணலியில் போட்டு வறுத்து, பொடி செய்து கொள்ள வேண்டும்.
பின்னர் சிக்கன் துண்டுகளை நன்கு கழுவி, நீரை முற்றிலும் வடித்துவிட்டு கத்தி கொண்டு லேசாக ஆங்காங்கு கீறி விட வேண்டும்.
ஒரு பௌலில் தயிர், இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு, குங்குமப்பூ, எலுமிச்சை சாறு, மைதா மற்றும் மசாலா பொடி ஆகியவற்றைப் போட்டு கிளறி, பின் அதில் சிக்கன் துண்டுகளை சேர்த்து 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
வீட்டில் மைக்ரோவேவ் ஓவன் இருந்தால், சிக்கன் துண்டுகளை அதனுள் வைத்து 15-20 நிமிடம் க்ரில் செய்து இறக்கவும் அல்லது க்ரில் கம்பி இருந்தால் அந்த கம்பியில் சிக்கன் துண்டுகளை சொருகி நெருப்பில் வாட்டி எடுக்கவும்.
இப்போது சுவையான கல்மி கபாப் ரெடி!!!
நன்றி | மாலை மலர்