செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் நில மிருள் பரணி | த. செல்வா

நில மிருள் பரணி | த. செல்வா

0 minutes read

இருள் சூழ் நிலத்தை காலம் எழுதித் தீர்க்கிறது
இது போல் இருளை எழுதிக் கிழித்த விரல்களால்
இன்னும் எழுதிக் கழிக்க வருகிறது
ஊழி சூழ் பொழுது

மின்மினி ஒன்றின் துணை பற்றிச் சுற்றி ய நிலம் எம்முடையது
எறிகணைப் பொறி தழுவி தடமேறிய பொழுது எம்முடையது
பிணிமெரி தணல்தாவிக் கலைந்த பொழுது எம்முடையது

பொழுதுகளைத் தூரவீசி
வண்ணத்தின் மீதமர்ந்து
பீனிக்சைப் புணர்ந்தோம்

இன்னுங் காயவில்லை
குருதி வடிந்த பாதக்கூதிர்

பிறகும் புத்தன் புன்கண்ணீரை இறைக்கச்
சூழுரைத்தானே

ஓ எழுகதிரே
நீயுமா நிலவை ஒழித்து வைத்திருக்கிறாய்
காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளைப் போல்
காணாமல் ஆக்கிவிட்டாய் நிலவை

ஆனாலும் அனல் தின்ற நிலத்தின் பிள்ளைகளாய்
நம்பிக்கைச் சுடர்பற்றி
சுவாலிக்கிறோம்

சொற்றுணை வேதியன்
சோதி வானவன் துணை யென.

த.செல்வா

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More