செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சமையல் கோடை வெயிலுக்கு உடலுக்கு குளிர்ச்சி தரும் மசாலா மோர்

கோடை வெயிலுக்கு உடலுக்கு குளிர்ச்சி தரும் மசாலா மோர்

1 minutes read

தற்போது மற்ற காலங்களிலும் வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால், அனைத்து காலங்களிலும் மோர் குடிக்க வேண்டிய நிலையில் உள்ளது. இன்று மசாலா மோர் செய்முறையை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

கெட்டித் தயிர் – 1 கப் தண்ணீர் – 1 கப்
கொத்தமல்லி – 2 டீஸ்பூன்
மோர் மிளகாய் – 1
உப்பு – தேவையான அளவு

தாளிப்பதற்கு…

எண்ணெய் – 1 டீஸ்பூன்
கடுகு – 1/4 டீஸ்பூன்

அரைப்பதற்கு…

பச்சை மிளகாய் – 1/2
கறிவேப்பிலை – 3 இலை
இஞ்சி – 1/4 இன்ச்

செய்முறை:

முதலில் தயிரை ஒரு பௌலில் போட்டு, அதனை நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு மிக்ஸியில் பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் இஞ்சி சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். அதே எண்ணெயில் மோர் மிளகாயை வறுத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து அரைத்து வைத்துள்ளதை மோரில் சேர்த்து, அத்துடன் மோர் மிளகாயை உடைத்து போட்டு, தாளித்ததையும் ஊற்றி, கொத்தமல்லியைத் தூவி தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து பரிமாறினால், மசாலா மோர் ரெடி!!!

நன்றி | மாலை மலர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More