செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை அரசின் நிதி நிர்வாக சீரின்மையால் மக்களின் உயிர் ஆபத்தில் | வீதிக்கு இறங்கிய மருத்துவர்கள்!

அரசின் நிதி நிர்வாக சீரின்மையால் மக்களின் உயிர் ஆபத்தில் | வீதிக்கு இறங்கிய மருத்துவர்கள்!

1 minutes read

அரசின் நிதி நிர்வாக சீரின்மையால் மக்களின் உயிர் ஆபத்தில் உள்ளது, என்பதை வலியுறுத்தி நாட்டில் மருத்துவர்கள் வைத்தியசாலை ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்கள்.

முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலை வைத்தியர்கள் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் உள்ளிட்டவர்கள் இன்று (07)நண்பகல் 12.30 மணிதொடக்கம் 1.30 மணிவரை மோசமான பொருளாதார நெருக்கடி நிலையை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளார்கள்.

அரசின் மோசமான நிதி நிர்வாகம் காரணமாக அத்தியவசிய மருந்துகள் இல்லாமல் சுகாதார கட்டமைப்பு சீரழிந்து வருகின்றது மக்களின் உயிர்கள் ஆபத்தில் உள்ளன, இலவச சுகாதாரம் ஆபத்தில் உள்ளது மற்றும் அத்திய அவசிய பொருட்களின் விலையேற்றம் என்பவற்றை கண்டித்து கண்டன பேரணியாக சென்று கவனயீர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை நுளைவாயிலில் இருந்து கவனயீர்பு பேரணியாக கோசங்கள்  எழுப்பியவாறு வைத்தியர்கள் ஊழியர்கள் வைத்தியசாலை முன்வீதியில் கண்டன கோசங்களை எழுப்பி கவனயீர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் முக்கியமான மருந்து பொருட்கள் இன்னும் இரண்டு மாதங்களுக்கே பயன்படுத்தக்கூடியதாக கையிருப்பில் இருப்பதாகவும்  இந்த நிலை மிகவும் ஆபத்தான நிலைமை என வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More